ஊராட்சிகளில் ஆன்லைன் மூலம் வரி செலுத்த வசதி 10-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வரியினங்களை ஆன் லைன் மூலம் செலுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது. அதுபோல் கிராம ஊராட்சிகளிலும் ஆன்லைன் மூலமாக வரி வசூல் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. ஊராட்சிகளில் ரசீது புத்தகம் மூலமாக பணத்தை ரொக்க மாக செலுத்தி வரி வசூல் நடக்கிறது. கொஞ்சம் வளர்ச்சி பெற்ற ஊராட்சிகளில் மட்டும் கணினி மூலமாக ரசீது வழங் கப்படுகிறது. வரி வருவாயை வங்கி கணக்கு மூலமாககையாள வசதியாக ஆன்லைன் மூலமாக வரி வசூல் நடைமுறை நடப்பு நிதியாண்டில் நடைமுறைக்கு வர உள்ளது.
வருகிற 10-ந் தேதி முதல் ஆன்லைன் வரி வசூல் நடைமுறைக்கு வருகிறது. அதற்காக ‘VP TAX' என்ற இணையதள வசதி அறிமுகம் செய் யப்பட்டுள்ளது. இதில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, வர்த் தக உரிமம், இதர வரியினம் இடம்பெற்றுள்ளன. இந்த இணை யதளத்தில் சொத்துவரி கணக்கீடு, உரிமையாளர் செலுத்த வேண்டிய நிலுவை தொகை, உடனடியாக வரி செலுத்தும் வசதி, வரி செலுத்திய விவரம் ஆகியவற்றை தனித்தனியாக பார்க்கலாம். மாவட்டம், ஒன்றியம், ஊராட்சி, வரி விதிப்பு எண், செல் போன் எண் ஆகியவற்றை பதிவு செய்து, செலுத்த வேண்டிய வரியை ஆன்லைன் மூலமாக செலுத்த முடியும். அதற்கான ரசீதையும் பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.