மாட்டு வண்டி பந்தயம்
அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நெடுங்குடி கிராமத்தார்கள் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் 47 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 40 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவாக நடத்தப்பட்டது.
பெரிய மாடு பிரிவில் 10 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை கே.புதுப்பட்டி கே.ஏ. அம்பாள், 2-ம் பரிசு ஈழக்குடிப்பட்டி யாழினி பெரிய கருப்பன், 3-ம் பரிசு அறந்தாங்கி ஆசிக், 4-ம் பரிசு தல்லாம்பட்டி மங்கையர்கரசி ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.
பரிசு
தொடர்ந்து சிறிய மாடு பிரிவில் 30 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்ட பந்தயமானது 2 பிரிவாக நடத்தப்பட்டது. இதில் பந்தய தூரமானது போய்வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை பரலி செல்வி, கோ.வேலங்குடி சுந்தர கருப்பன், 2-ம் பரிசு கே.புதுப்பட்டி கே.ஏ. அம்பாள், பள்ளத்தூர் ஹரிகிருஷ்ணன், 3-ம் பரிசு புனவாசல் வேம்பையன், கருவிடைச்சேரி சாத்தையா, 4-ம் பரிசு நெடுங்குடி பெருமாள், பேராவூரணி கழனிவாசல் லிங்கேஷ் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன. இறுதியில் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற நெடுங்குடி, கீழாநிலைக்கோட்டை, கல்லூர் சாலை இருபுறமும் திரளான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.