ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய குழுத்தலைவர் உமாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில், துணைத்தலைவர் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அலுவலர் முருகையா தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் எந்த ஒரு சாலையையும் மேம்பாடு செய்யாத நெடுஞ்சாலைத்துறை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டரை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, புண்ணியவயல் ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தில்குமரன் பேசும்போது, ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் நெடுஞ்சாலைதுறை மூலம் கிராம சாலைகள் திட்டம் செயல்படுத்தவில்லை என்றார். பொன்பேத்தி கவுன்சிலர் சுந்தரபாண்டியன் இப்பகுதியில் அடிக்கடி மின்சாரம் நிற்கிறது என்றார். அதற்கு கரூர் மின்வாரிய அதிகாரி பதிலளித்து பேசும்போது, அமரடக்கி துணை மின்நிலையத்தின் அருகே மின்வாரிய ஊழியர்கள் வீடு கட்டி குடியேறிய பிறகுதான் மின்வினியோகம் சரிசெய்ய முடியும் என்று தெரிவித்தார். மீமிசல் கவுன்சிலர் அய்யரமேஷ் சாலை வசதி ஏற்படுத்தி தந்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.