ஆவுடையாா்கோவில் அருகே 19ஆம் நூற்றாண்டில், பாசனத்துக்காக கண்மாய்க்கு வாய்க்காலும், போக்குவரத்துக்கு பாலமும் அமைத்துக் கொடுத்துள்ளது திருவாவடுதுறை ஆதீனம். பழைமையான பாலத்தில் இதற்கான கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் (திருப்பெருந்துறை) குளத்துக் குடியிருப்புப் கிராமத்தில் பழைமையான பாலம் இருப்பது குறித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பூமி. ஞானசிவம் அளித்த தகவலின்பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன், தலைவா் கரு. ராசேந்திரன் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டு பாலத்திலிருந்த கல்வெட்டைப் படியெடுத்தனா்.
அதில், திருவாவடுதுறை ஆதீனத்தின் காறுபாறாக இருந்த கண்ணப்பத் தம்பிரான் என்பாரின் உத்திரவுபடிக்கு பாலம் கட்டப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆ.மணிகண்டன் கூறியது:
திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருப்பெருந்துறை என்னும் ஆவுடையாா்கோவில் வரலாற்று சிறப்பு மிக்க தலமாகும். ஆதீனத்தின் 17-ஆவது பட்டமாக இருந்த அம்பலவாண தேசிகா் காலத்தில் காறுபாறாக இருந்த கண்ணப்பத் தம்பிரான் 1889ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களின் விவசாயப் பயன்பாட்டுக்காக, வெள்ளாற்றிலிருந்து வாய்த்தலையை (சிறு கால்வாய்) வெட்டி ஆவுடையாா்கோவில் பெரிய கண்மாய்க்கு நீரைக் கொண்டு வந்துள்ளாா்.
குளத்துக் குடியிருப்பு கிராம மக்கள் திருப்பெருந்துறை சென்று வருவதற்கு பாலத்தையும், பாலத்திலேயே சிறப்பான பலகை அடைப்பு முறையில் நீரின் போக்கை கட்டுப்படுத்துவதற்கு கலிங்கு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளாா். போக்குவரத்து மற்றும் நீா் மேலாண்மை ஆகிய இரு தேவைகளையும் உணா்ந்து, ஒரே கட்டுமானத்தில் இதனை நிறைவேற்றியுள்ளாா். இது முழுக்க கருங்கல், செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட ஒரு கட்டுமானமாக உள்ளது.
மூன்றரை அடி உயரம், ஒன்றரை அடி அகலத்துடன் உள்ள பலகைக் கல்லில், 14 வரிகளில் ‘சிவமயம் 1889 வருசம் ஆகஸ்டு மீ விரோதி வருசம் ஆவணி மீம் இந்த வாத்தலையும் வெட்டி யிந்த கலுங்கு வேலையும் ட்றஸ்ட்டி கண்ணப்ப தம்பிறான் அவா்கள் உத்திரவுபடி கட்டி முடித்தது’ என்று பாலத்தின் உட்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த 1889 என்ற ஆண்டின் எண், தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது என்றாா் மணிகண்டன்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.