புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) அம்மாபட்டினம் கிளை-1 மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் இன்று (30.05.2026, சனிக்கிழமை) தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட துணைச் செயலாளர் சைபுல் கரீம் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் ராஷிக், செயலாளர் இக்பால், பொருளாளர் முஹம்மது யூசுப், துணைத் தலைவர் சேக்தாவூத், துணைச் செயலாளர் ஆதில், மருத்துவ அணி நிஹால் மற்றும் தொண்டர் அணி உசேன் ஆகியோர் முன்னிலை வகித்து முகாமினை முறைப்படுத்தினர்.
இம்முகாமில் இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்க முன்வந்தனர். அவர்களில் மருத்துவத் தகுதியின் அடிப்படையில், முதற்கட்டமாக 48 யூனிட் இரத்தம் பெறப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.
இரத்ததானம் வழங்கிய கொடையாளர்கள் அனைவருக்கும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கி மேலாளரும், மருத்துவருமான Dr. ஹேமலதா DCH அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.
முகாமின் நிறைவாக, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபிபுல்லாஹ் நன்றியுரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், "ஒரு மனிதனை வாழவைத்தவர், உலக மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவர் போன்றாவார்" என்ற புனித குர்ஆனின் உன்னதமான போதனையின் அடிப்படையில், மனிதநேயத்தை போற்றும் வகையில் இந்த முகாம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும், இம்முகாம் தொய்வின்றி நடைபெற முழு ஒத்துழைப்பு நல்கிய மருத்துவர் Dr. ஹேமலதா மற்றும் அவரது மருத்துவக் குழுவினருக்கும், குருதிக்கொடை வழங்கிய கொடையாளர்களுக்கும், முகாம் ஏற்பாடுகளைத் திறம்படச் செய்த கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:



0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.