புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் கலைச்செல்வி (வயது 55). இவர் நேற்று காலை வழக்கம்போல் புதுக்கோட்டையில் இருந்து அரசு ஜீப்பில் விராலிமலைக்கு பணிக்கு சென்று கொண்டிருந்தார். ஜீப்பை அன்னவாசலை சேர்ந்த ராஜசேகர் ஓட்டி சென்றுள்ளார்.
இலுப்பூர் அருகே உள்ள மேட்டுச்சாலை எனும் இடத்தில் ஜீப் சென்றபோது முன்புற டயர் பொருத்தப்பட்ட பேரிங் துண்டாகி இடதுபுற டயர் மட்டும் கழன்று தனியாக ஓடியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் ராஜசேகர் சுதாரிப்பதற்குள் ஜீப் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜீப் அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி மற்றும் டிரைவர் ராஜசேகர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.