கோபாலப்பட்டிணத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை.. பெருந்திரளானோர் பங்கேற்பு!



ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானம் மற்றும் அரண்மனை தோப்பில் நடைப்பெற்றது. இதில் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

ஈத்கா மைதானம்
 
கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் காலை 7.00 மணியளவில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது. அவுலியா நகர் பள்ளிவாசல் இமாம் மௌலவி.J.உஸ்மான் அலி நாஃபியீ உரை நிகழ்த்தினார். அதன் பிறகு குத்பா உரை, தூஆ செய்யப்பட்டது.
இதில் ஊர் மக்கள், பெரியோர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் நபி வழியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாள் கொண்டாடினார்கள்.

அரண்மனை தோப்பு

TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக அரண்மனை தோப்பில் காலை 7.00 மணிக்கு நபி வழியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகையை தொடர்ந்து TNTJ மாவட்டத் தலைவர் குலாம் முகமது பாட்ஷா பெருநாள் உரை நிகழ்த்தினார்.
இதில் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு நபிவழியில் தொழுகையினை நிறைவேற்றினார்கள்.
கோபாலப்பட்டிணம் மக்கள் தியாகத் திருநாளான பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் தமது வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்து மகிழ்ச்சி பொங்க தியாகத் திருநாளை கொண்டாடி புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments