கோட்டைபட்டினத்தில் சங்கம் ஆலமரம் இளைஞர்கள் நடத்திய சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி!



கோட்டைபட்டினத்தில் சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. 
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் சங்கத்து ஆலமரம் இளைஞர்கள் சார்பாக சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டி நேற்று நடைபெற்று. இந்த கால்பந்தாட்ட போட்டியில் கோட்டைபட்டினத்தை சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை MFC அணி கைப்பற்றியது. இரண்டாம் பரிசை CFC அணியும், மூன்றாம் பரிசை அரபியன் அணியும் பெற்றது. சிறந்த ஆட்ட நாயகன் பரிசை பைஸ் பெற்றார்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆனா அறக்கட்டளை சார்பில் ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்து ஆலமரம் இளைஞர்கள் செய்திருந்தனர்.







தகவல்: முகமது மசூது,கோட்டைப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments