புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நோன்பு &ஹஜ் பெருநாளை முன்னிட்டு பெண்களுக்கான தோப்பு நடைபெறுவது வழக்கம்.
இங்கு தீன்பண்ட கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் அமைக்கப்படுவதால் இந்த தோப்பிற்கு கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் உறவினர்கள் அதிகமாக திரள்வது வழக்கம்.
29/06/2023 வியாழக்கிழமை முதல் பெருநாள் அன்று மாலை
5 மணியளவில் கோபாலப்பட்டிணத்தை கருமேகங்கள் சூழ்ந்தது. அதை தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் பெருநாள் தோப்பு களையிழந்து காணப்பட்டது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் தோப்பு அன்று மழை இல்லாததால் பெண்கள் கூட்டத்தால் நேற்றைய தினம் பெருநாள் தோப்பு களை கட்டியது.
ஹஜ் பெருநாள் தோப்பானது வழக்கமாக மூன்று நாட்கள் நடைபெறும் , முதல் நாள் அன்று மழை பெய்த காரணமாக நாளை ஒரு நாள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
இதனால் நாளை நான்காவது நாளாக ஜூலை 02 ஞாயிற்றுக்கிழமை பெண்கள் பெருநாள் தோப்பு நடைபெறும் என தெருவிக்கப்பட்டுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.