புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் தொடக்கம்




தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2023-ம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரலின்படி குரூப்-1 மற்றும் குரூப்-2 ஆகிய போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் (ஆகஸ்டு) வெளியிடப்பட உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 மற்றும் குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களை கொண்டு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. 

ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி-வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும். எனவே போட்டித்தேர்வர்கள் நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் சேருவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரிலோ அல்லது 043322-222287 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments