அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி சங்கத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு ரோட்டரி முன்னாள் தலைவர் சத்துரு சங்கர வேலுச்சாமி தலைமை தாங்கினார். இதையடுத்து, புதிய நிர்வாகிகளாக ரோட்டரி மெய்யப்பன் தலைவராகவும், செயலாளராக கோவிந்தராஜ், பொருளாளராக கோபிநாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வருங்கால மாவட்ட ஆளுநர் ரோட்டரி கார்த்திக், துணை ஆளுநர் ரோட்டரி பழனிவேல், மண்டல ஒருங்கிணைப்பாளர் பீர்சேக் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
இதையடுத்து, அழியா நிலை வெண்புறா விளையாட்டு கழகத்திற்கு நிதியுதவியும், ஆவணத்தான்கோட்டை அரசு தொடக்கப்பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்களும், குரும்பூர் வள்ளலார் காப்பகத்திற்கு அரிசி ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்தநிகழ்ச்சியில் முன்னாள் ரோட்டரி சங்க செயலாளர் செல்வகுமார், பொருளாளர் கோவிந்தராஜ், பட்டய தலைவர் முரளிதரன், சங்க ஆலோசகர் ராசி மூர்த்தி மற்றும் முன்னாள் தலைவர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். விழா முடிவில் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.