கோட்டைப்பட்டினம் அருகே புதுக்குடி கிராமத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பாக பாய்மர படகு போட்டி




புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே புதுக்குடி கிராமத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பாக பாய்மர படகு போட்டி நடைபெற்றது. போட்டியை மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். 3 நாட்டிக்கல் மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்ட இந்த போட்டியில் ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்து சுமார் 20 படகுகள் கலந்து கொண்டன. தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்ட படகுகள் பந்தய தூரத்தை நோக்கி சீறிப்பாய்ந்து சென்று வெற்றி பெற்றன. போட்டியில் முதல் பரிசு ரூ.50 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம் நம்புதலை சேர்ந்த படகும், 2-வது பரிசு ரூ.40 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணை பகுதியை சேர்ந்த படகும், 3-ம் பரிசு ரூ.30 ஆயிரத்தை தொண்டி புதுக்குடியை சேர்ந்த படகும், 4-ம் பரிசு ரூ.20 ஆயிரத்தை தொண்டி புதுக்குடியை சேர்ந்த படகும், 5-ம் பரிசு ரூ.10 ஆயிரத்தை தொண்டி புதுக்குடியை சேர்ந்த படகும் தட்டிச்சென்றன. இதையடுத்து வெற்றிபெற்ற படகுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. படகு போட்டியை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து கண்டுகளித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments