அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரயில் பாதை அமைப்பது குறித்து இட ஆய்வுப் பணி நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வே துறை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளது.
அரியலூரில் இருந்து பெரம்பலூர் துறையூர் வழியாக நாமக்கல்லுக்கு புதிய ரயில் பாதை அமைக்க கோரி, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் மத்திய ரயில்வே துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், "சுதந்திர இந்தியாவில் ரயில் பாதை இல்லாத தொகுதியாக அரியலூர் பெரம்பலூர் பகுதி விளங்குகிறது. எனவே புதிய ரயில் பாதை அமைத்து தருகிற பட்சத்தில் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் அந்த பகுதியின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்" என டாக்டர் பாரிவேந்தர் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து மத்திய ரயில்வே துறை டாக்டர் பாரிவேந்தருக்கு எழுதிய கடிதத்தில், "அரியலூருக்கும் நாமக்கல்லுக்கும் இடையே பெரம்பலூர், துறையூர், தலையங்கார்பேட்டை வழியாக 116.26 கி.மீ. புதிய ரயில் பாதைக்கான இறுதி கட்ட ஆய்வு கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஆய்வு பணிகள் முடிந்து அதன் முடிவுகள் உறுதியான பிறகு திட்டம் செயல்படுத்துவது பற்றிய முடிவு சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.