சிறப்பு சலுகை
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6-வது புத்தக திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி ஆகஸ்டு 6-ந் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகங்கள் மூலம் 120 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
புத்தக திருவிழாவை முன்னிட்டு அனைத்து அரங்குகளிலும் வாசகர்களுக்கு சிறப்பு சலுகைகளில் புத்தகங்கள் விற்கப்பட உள்ளன. பள்ளி மாணவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. மாணவர்களுக்கு குறிப்பிட்ட பதிப்பகங்களில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
தொடக்க விழா
இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டரும், புத்தக திருவிழா குழு தலைவருமான மெர்சி ரம்யா தலைமை தாங்குகிறார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே முன்னிலை வகிக்கிறார். புத்தக திருவிழாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து மாலையில் நடைபெறும் விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அறிவியல் இயக்க மாநில தலைவர் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றளர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
புத்தக திருவிழா இன்று தொடங்கவுள்ளதையொட்டி மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று அரங்குகள் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.