புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நிலுவை வழக்குகளை சமரச தீர்வு காண சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுந்தர் அறிவுறுத்தினார்.
நிலுவை வழக்குகள்
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில சமரச மையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சமரச மையம் இணைந்து சமரச தீர்வு முறையை மேம்படுத்தும் விதமாக முத்தரப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாக பொறுப்பு நீதிபதியுமான சுந்தர் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு சமரச தீர்வின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பாகப்பிரிவினை வழக்குகள் அதிகமாக நிலுவையில் இருப்பது குறித்தும், மத்தியஸ்தர்கள் மற்றும் வக்கீல்களின் முக்கியத்துவம் குறித்தும், மேலும் கோர்ட்டுகளில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை சுமுகமாகவும், தரப்பினர்களுக்கு திருப்தியாகவும் முடிவு காண சமரச தீர்வு மிகச்சிறந்த வழி என்பதை அவர் வலியுறுத்தினார்.
நீதிபதிகள்
நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி நாராயணன் தலைமை தாங்கினார். மாநில சமரச மையத்தின் மூத்த பயிற்றுனர் விஜயகமலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தி வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான ராஜேந்திர கண்ணன் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.