தில்லைவிளாகம் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் நாச்சிகுளம் கிளை தவ்ஹீத் ஜமாத் கூட்டத்தில் கோரிக்கை




தில்லைவிளாகம் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும். என்று நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமாத் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது

முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை செயற்குழு கூட்டம் கிளை செயலாளர் அலா வுதீன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் திருவாருர் முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ரயில் நிலையம் அருகாமையில் உதயமார்தாண்டபுரம், பின்னத்தூர், எடையூர். தேவதானம், புத்தகரம், தோலி, தில்லைவிளாகம், இடும்பாவனம் 8க்கும் மேற்பட்ட ஊராட்சி மற்றும் 30க்கும் மேற் பட்ட குக் கிராமங்களும் அமைந்துள்ளது.

வேலைக்கு செல்வதற் கும், மேற்படிப்புக்கு கல் லூரி மாணவர்கள் செல் வதற்கும் விவசாயிகள் வியாபாரிகள் மருத்துவ தேவைக்கு பெருநகரங் களுக்கு செல்லவதற்கும் பேருந்து போக்குவரத்து பயன்படுத்துவதால் பெரும் பொருளாதா ரத்தை செலவு செய்ய வேண்டி உள்ளது.

இப்பகுதியில் தினக்கூ லிகள், விவசாய தொழி லாளிகள், சிறு வியாபா ரிகள் என ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வசித்து வருகின்றனர்.

எனவே தில்லைவிளாகம் மார்க்கம் வழியாக செல்லும் தாம்பரம் செங் கோட்டை விரைவு ரயில் செகேந்திரபாத் விரைவு ரயில் இம்மார்க்கம் வழி யாக செல்லும் அனைத்து ரயில்களும் நின்று சென் றால் மேற்குறிப்பிட்ட அனைவருக்கும் அலைச் சல் இல்லாமல் பெரும் உதவியாக இருக்கும் ஆகையால் அனைத்து விரைவு ரயில்களும் தில் லைவிளாகம் ரயில் நிலை யத்தில் நின்று செல்ல ரயில்வே துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது..

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளா ளர் ஹாஜா முகைதீன், மாவட்ட துனைதலை வர் அஸாருதீன், கிளை பொருளாளர் கமருதீன், கிளை துணை செயலா ளர் மைதீன், அமிரக பொறுப்பாளர் மீரான் உசேன், பரக்கத் அலி ஆகி யோர் கலந்துக் கொண்டனர். -

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments