கட்டுமாவடியில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு இராமநாதபுரம், பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் அதிகமானோர் தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். அதே போன்று புதுக்கோட்டை ,தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகமானோர் தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இங்கு வரக்கூடிய வாகனங்கள் மீன் மார்க்கெட் அருகே அறந்தாங்கி சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் இந்த சாலையின் வழியே செல்லக்கூடிய இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை மீன் மார்க்கெட் பரபரப்புடன் காணப்படுவதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த வழியாக செல்லும் ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கும் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.