புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மின் இணைப்பு மீட்டர்களுக்கு மாதம் ரூ.60 வீதம் 2 மாதங்களுக்கு ரூ.120 வாடகையை வருகிற செப்டம்பர் மாதம் முதல் வசூலிக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 2 முறை மின் கட்டணத்தை உயர்த்தி சாமானிய மக்கள், வணிகர்கள் போன்றோருக்கு பெரும் சுமையை அரசு ஏற்படுத்தியுள்ளது.
ஜி.எஸ்.டி. துறையில் அமலாக்கத்துறையை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும், அதிகபட்ச 28 சதவீத வரியை குறைக்க வலியுறுத்தியும் தென் மண்டலம் சார்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில வணிக நிர்வாகிகள் மத்திய நிதி மந்திரியை செப்டம்பர் 5-ந் தேதி சந்தித்து முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சாமானிய வணிகர்கள், சிறு, குறு வியாபாரிகளை பாதுகாத்திடும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். பிளாஸ்டிக் பைகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வருவதை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். அதனை விடுத்து வணிகர்கள் மீது வழக்கு போடுவது நியாயமற்றது.
அறந்தாங்கி வழியாக சென்னை - காரைக்குடி இடைய தினசரி ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வேயை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வலியுறுத்த உள்ளோம்.
செப்டம்பர் 05ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சரையும் சந்தித்து நேரடியாக மனுவை கொடுக்க இருக்கிறோம் என்று பேட்டி அளித்தார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து ஆவுடையார்கோவிலில் விக்கிரமராஜா வர்த்தக சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
PC Credit: Aranthangi Anand Thangasamy
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.