புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி நாராயணன் வழிகாட்டுதல் படி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை கோர்ட்டில் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வசந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராஜேந்திர கண்ணன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஜெயகுமாரி ஜெமிரத்னா, முதன்மை சார்பு நீதிபதி சசிக்குமார், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா ஆகிய நீதிபதிகள் கொண்ட 3 அமர்வுகள் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் ஒரு அமர்வும் நடைபெற்றது.
இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி மற்றும் வங்கி வராக்கடன் வழக்குகள் என மொத்தம் 110 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. மேலும் உரியவர்களுக்கு ரூ.1 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரத்து 233 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.