அதிராம்பட்டினத்தில் மூதாட்டியின் ஆதரவற்ற உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அதிராம்பட்டினத்தில் மூதாட்டியின் ஆதரவற்ற உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ஆதரவற்ற மூதாட்டி சாவு
அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியான சுரைக்காய்க்கொல்லை பகுதியில் வசித்து வந்தவர் செல்லம்மாள் (வயது 92). இவர் எந்த ஆதரவும் இல்லாமல் வாழ்ந்து வந்தார். செல்லம்மாவின் பேத்தி கார்த்திகா.
இவர் வறுமையில் இருந்து வந்த நிலையில் தனது பாட்டி செல்லம்மாவுக்கு உணவு கொடுத்து கவனித்து வந்தார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட செல்லம்மாள் மரணமடைந்தார்.
இந்துமுறைப்படி அடக்கம்
வறுமை நிலையில் இருந்த பேத்தி கார்த்திகா தனது பாட்டியின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். இதை தொடர்ந்து அவர் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களிடம் உதவி நாடி தனது பாட்டியின் உடலை அடக்கம் செய்ய உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் மூதாட்டி செல்லம்மாளின் உடலை ஆம்புலன்சில் எடுத்துச் சென்று இந்து மத வழக்கப்படி அடக்கம் செய்தனர்.
பொதுமக்கள் பாராட்டு
இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்் இஸ்லாமிய இளைஞர்களை பாராட்டினர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.