இராமேஸ்வரம்-செகந்திராபாத் வாரந்திர சிறப்பு ரயில் மூலமாக 7 மாதங்களுக்கு கிடைத்த வருவாயை வெளியிட்ட இந்திய ரயில்வே!



இராமேஸ்வரம்-செகந்திராபாத் வாரந்திர சிறப்பு ரயில் மூலமாக 7 மாதங்களுக்கு இந்திய ரயில்வேக்கு கிடைத்த வருமானம் குறித்த தகவலை இந்திய ரயில்வே வெளியிட்டு உள்ளது.

ராமேஸ்வரம்-செகந்திராபாத் ரயில் அதிராம்பட்டினம், அறந்தாங்கி வழியாக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022-ஆம் ஆண்டு நவம்பர் வரை இந்த ரயிலில் பயணித்த பயணிகள் மற்றும் அதன் மூலம் கிடைத்த வருமான விபரத்தை ரயில்வே வெளியிட்டு உள்ளது.

வாரம் ஒரு நாள் இயக்கப்படும் இந்த ரயிலில் திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் ரூ.29,19,185, மயிலாடுதுறைக்கு ரூ.11,21,423, சென்னைக்கு ரூ.54,68,868 வருமானம் கிடைத்துள்ளது. தாம்பரத்தில் நிறுத்தம் இல்லாத இந்த ரயிலை அதிரை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுதுவிட்டு ஏராளமானோர் இதில் சென்னை நோக்கி செல்கிறார்கள்.

இதில் ரயில் நிலையங்கள் வாரியாகவும் வருவாய் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிராம்பட்டினம் ரயில் நிலையம் மூலம் ரூ.4,05,552 வருவாய் கிடைத்துள்ளது. இது திருத்துறைப்பூண்டி, அறந்தாங்கி, சிவகங்கை, காரைக்குடி, ராமநாதபுரம் ரயில் நிலையங்கள் மூலம் கிடைத்த வருவாயைவிட அதிகம்.

எனவே வருவாய் அதிகமுள்ள பயணிகள் அதிகம் சென்றுவரும் அதிராம்பட்டினத்தில் தாம்பரம்-செங்கோட்டை ரயிலை நிறுத்த வேண்டும் என்றும், ராமநாதபுரம்-செகந்திராபாத் ரயிலை நிரந்தரமாக்கி வாரந்தோறும் கூடுதல் சேவைகளை வழங்குவதுடன், அதிராம்பட்டினத்தில் நின்று செல்லும் வகையில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் நீட்டிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 01/04/2022 முதல் 30/11/2022 வரை ஏழு மாத காலத்திற்க்கு வண்டி எண் 07696 ராமநாதபுரம்-செகந்திராபாத் இரயில் காரைக்குடி-திருவாரூர்-மயிலாடுதுறை பாதை வழியாகவும், சென்னை எழும்பூர் வழியாகவும் இயங்குவதால் இந்திய இரயில்வேக்கு கிடைத்த வருமானங்கள் குறித்து விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏழு மாத காலத்தில் இந்த இரயிலை வாரம் ஒரு முறை இயக்குவதால் காரைக்குடி முதல் திருத்துறைப்பூண்டி வரையிலான (காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் திருத்துறைப்பூண்டி) உள்ள ரயில் நிலையங்கள் மூலமாக 17,81,315 ரூபாயும், திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையம் மூலம் 11,37,870 ரூபாயும், மயிலாடுதுறை சந்திப்பு ரயில் நிலையம் மூலம் 11,21,423 ரூபாயும், (குறிப்பாக இது சென்னை வழியாக இயங்குவதால்) சென்னை எழும்பூர் நிலையம் மூலம் 54,68,868 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த இரயிலுக்கு தாம்பரம் நிறுத்தம் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

இது ராமநாதபுரம்-செகந்திராபாத் ஒருவழிப்பாதை இரயிலின் ஏழு மாத கால வருமானம் மட்டுமே. இந்த இரயிலை நிரந்தரமாக்க வேண்டும் என்பது பல தரப்பட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments