இராமேஸ்வரம் - அஜ்மீர் வாரந்திர ஹம்சாபர் ரயிலை ஜெய்ப்பூர் வழியாக ஃபெரோஸ்பூர் வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்





மானாமதுரை,திருச்சி,  விழுப்புரம் செங்கல்பட்டு சென்னை எழும்பூர், விஜயாவாடா  நாக்பூர், போபால், வழியாக செல்லும் இராமேஸ்வரம் - அஜ்மீர் வாரந்திர ஹம்சாபர் ரயிலை ஜெய்ப்பூர் வழியாக ஃபெரோஸ்பூர் வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது



இராமேஸ்வரத்தில் இருந்து இராஜஸ்தான் மாநிலம் அஜீமீர்  வரை வாரந்திர ஹம்சாபர் ரயில்  (வண்டிஎண் 20973/20974)இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் மூலம் , தமிழ்நாடு ஆந்திரா மஹாராஷ்டிரா மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மாநிலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் இராமேஸ்வரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 10.55 மணிக்கு அஜ்மீர் வந்தடையும்.

மறுமார்க்கமாக அஜ்மீரில் இருந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு
8.20 மணிக்கு புறப்படும் ரயில் திங்கட்கிழமை இரவு 9.00  மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும்.

இந்த ரயில் தமிழகத்தில் மானாமதுரை திருச்சி அரியலூர் விழுப்புரம் செங்கல்பட்டு சென்னை எழும்பூர்,  நிறுத்துங்களுடன் வழியாக இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் இராமேஸ்வரம் - அஜ்மீர் வாரந்திர ஹம்சாபர் ரயிலை ஜெய்ப்பூர் வழியாக ஃபெரோஸ்பூர் வரை  நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது.



மேலும் இந்த ரயில் சேவை நீட்டிப்பு குறித்து ரயில்வே வாரியம்  ஒப்புதல் அளித்துள்ளது 

PC Credit : Siva Prakash 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments