செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரெயிலின் எம் 5 பெட்டியில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக குளிர்சாதன வசதி வேலைசெய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள், இது தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
அப்போது அதிகாரிகள், அடுத்த ரெயில் நிலையம் வந்தவுடன் சரி செய்யப்படும் என கூறியுள்ளனர். ஆனால் குளிர்சாதன வசதி செய்துகொடுக்காததால், ஆத்திரம் அடைந்த பயணிகள், அறந்தாங்கி ரெயில் நிலையத்தில் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய அதிகாரிகள், திருவாரூர் ரெயில் நிலையத்தில் வைத்து தொழில்நுட்பக்கோளாறு சரிசெய்யப்பட்டு குளிர்சாதன வசதி செய்துகொடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பயணிகள் ரெயிலில் ஏறி சென்றனர். இதன் காரணமாக ரெயில் 1.20 நேரம் தாமதமாக புறப்பட்டுச்சென்றது.
திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு வண்டி இயக்கப்பட்டது பயணத்தில் ஏற்பட்ட சுமார் 80 நிமிடங்கள் கால தாமதத்தை 12 நிமிடங்களாக ஈடுசெய்து தாம்பரம் சென்றடைந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.