சாயல்குடி அருகே பைக்- கார் நேருக்கு நேர் மோதியதில் மாணவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தினர் 3 பேர் படுகாயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கடுகுச்சந்தை சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இசேந்திரன் (17), அன்பரசு (20), லிங்கேஸ்வரன் (22) . இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு மேலச்செல்வனூர் கிராமத்தில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஊரிலிருந்து பைக்கில் புறப்பட்டனர்.
ராமநாதபுரம் அருகே புத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (45), தனது மகன் ஹரி பாலா (14), மனைவி சண்முக வள்ளியுடன் கேரளாவுக்கு காரில் புறப்பட்டார்.
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சாத்தங்குடி விலக்கு பகுதியில் சென்றபோது பைக்- கார் நேருக்கு நேர் மோதின. இதில் இசேந்திரன், அன்பரசன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த லிங்கேஸ்வரன் ராமநாதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கார் மீது மோதிய வேகத்தில் தீப்பற்றிய பைக் முற்றிலும் உருக்குலைந்தது. விபத்தில் உயிரிழந்த இசேந்திரன் தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
காரில் பயணம் செய்து காயமடைந்த ஹரிபாலா, சண்முகவள்ளி ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக் குறித்து கடலாடி போலீஸார் விசாரிக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.