அறந்தாங்கி & பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் ஆய்வு




அறந்தாங்கி & பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் ஆய்வு செய்தார்கள் 

அறந்தாங்கி 

08.09.2023 சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரயில் நிலையத்தை ஆய்வு செய்வதற்காக வருகை தந்த திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் I.R.T.S அவர்களிடம் வர்த்தக சங்கம் சார்பாக அறந்தாங்கி மக்களின் ரயில் கோரிக்கைகள் மற்றும் ரயில் நிலைய மேம்பாடு தொடர்பான கோரிக்கைகள் மனுவாக அறந்தாங்கி வர்த்தக சங்கத் தலைவர் திரு.எஸ்.காமராஜ் அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்த ஆய்வு நிகழ்ச்சியின் தொடக்கமாக அறந்தாங்கி ரயில் நிலையத்தின் முன்புறம் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர்  அன்பழகன் I.R.T.S அவர்கள் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி வர்த்தக சங்க செயலாளர் வெ.தவசுமணி பொருளாளர் எஸ்.சேக்அப்துல்லா வர்த்தக சங்க முன்னாள் தலைவர் திரு ஏ பி ராஜ்குமார்
வர்த்தக சங்க நிர்வாகிகள் வர்த்தகர்கள். அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.









பட்டுக்கோட்டை 

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில்  திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு செய்தார் 

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன்  09.09.2023 சனிக்கிழமை காலை 7 மணிக்கு திருச்சி சந்திப்பிலிருந்து சிறப்பு ஆய்வு ரயில் பெட்டியில் புறப்பட்டு  திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி  அதிராம்பட்டினம் ரயில் நிலையங்களை ஆய்வு செய்துவிட்டு மதியம்  3 மணிக்கு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வருகை தந்தார்.

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உடன் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் டாக்டர் செந்தில்குமார் முதுநிலை கோட்ட பாதுகாப்பு அலுவலர் சரவணன் மற்றும் திருச்சி கோட்ட  ரயில்வே அதிகாரிகள் வந்திருந்தார்கள்.

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் செயலாளர் வ. விவேகானந்தம் துணை செயலாளர் மு கலியபெருமாள் தணிக்கையாளர் ஆ.ராமமூர்த்தி உறுப்பினர் சி.தைனீஸ் ராஜ்  விதை அறக்கட்டளை நிறுவனர் சக்திகாந்த் ஆகியோர் கோட்ட ரயில்வே மேலாளருக்கு பொன்னாடை, மலர் மாலை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் கோட்ட ரயில்வே மேலாளர் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் சிக்னல் பிரிவு, எலக்ட்ரிக்கல் பிரிவு ,பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் இரயில் பாதைகளை  ஆய்வு செய்தார் .

மேலும் தீயணைப்பு சாதனங்கள் முறையாக செயல்படுகிறதா என்று ஆய்வு செய்தார் 

பின்னர் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை விதை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கோட்ட ரயில்வே மேலாளர் துவங்கி வைத்தார்.

பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள் 

ஞாயிற்றுக்கிழமைகளில் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள பயண சீட்டு முன்பதிவு மையத்தை மீண்டும் இயக்க வேண்டும் .

கம்பன் விரைவு ரயிலுக்கு பதிலாக தாம்பரம் ராமேஸ்வரம் தினசரி  இரவு நேர விரைவு ரயில், சோழன் அதிவிரைவு ரயிலுக்கு மயிலாடுதுறையில் இணைப்பு ரயிலாக காரைக்குடி மயிலாடுதுறை  ரயிலை இயக்க வேண்டும்.

 திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி ரயில் தடத்தில் இயங்கி வரும் பயணிகள் ரயிலை ஞாயிற்றுக்கிழமையும் இயக்க வேண்டும்.

 அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் தாம்பரம் செங்கோட்டை விரைவு ரயில் நிற்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர் 

 திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்கள்









News Credit: Aranthangi & Pattukottai Rail Association 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments