வடகிழக்கு பருவ மழை மீட்பு பணிக்கு 3,500 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பேரிடர் மேலாண்மை பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 762 கிராமங்களிலிருந்து 3,500 தன்னார்வலர்கள் தேர்வு செய்து தமிழ்நாடு அரசின் முதல்நிலை மீட்பாளர்கள் என்ற திட்டத்தின் கீழ் அவர்களுக்கு மாவட்டத்தில் 3 கட்டங்களாக பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசின் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் 300 பேரிடர் கால நண்பர்களுக்கு 12 நாட்கள் பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் பருவமழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு 3,500 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெயர், முகவரி
மேலும், முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் பேரிடர் கால நண்பர்களை தொடர்பு கொள்ளும் விதமாக அவர்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் www.pudukkottai.nic.in என்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பருவமழை காலங்களில் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக தங்களது கிராமங்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் பேரிடர் கால நண்பர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.