முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, செப்டம்பர் 12ம் தேதி முத்துப்பேட்டை ரயில் உபயோகிப்போர் சங்க நிர்வாகிகள் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இது தொடர்பாக முத்துப்பேட்டை ரயில் உபயோகிப்போர் சங்க நிர்வாகிகள் ஜெர்மன் அலி, சஜாத், சுல்தான் இபுராஹீம் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தினமும் காலையில் மயிலாடுதுறையிலி ருந்து திருவாரூர் வரும் ரயில் (06541) முன்னர் வேளாங்கண்ணி . திருச்சி ரயிலுக்கும் (06839), தஞ்சாவூர் - காரைக்கால் ரயிலுக்கும் (06832) இணைப்பாக இருந்தது. சமீபத்தில் நேரம் மாற்றப்பட்ட தால் இணைப்பு இல்லா மல் உள்ளது. மீண்டும் பழைய நேரத்திலேயே இயக்க வேண்டும்
மன்னார்குடி மயிலாடுதுறை ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்.
விழுப்புரம் - மயிலாடுதுறை ரயிலை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும்.
இரவு இயக்கப்படும் திருச்சி-தஞ்சாவூர் ரயிலை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும்,
அகஸ்தியம்பள்ளி - திருத்துறைப்பூண்டி ரயிலை குறைந்தபட்சம் தஞ்சாவூரில் இருந்து இயக்க வேண்டும்,
அதி காலையில் காரைக்காலில் இருந்து சேலத்துக்கு ரயில் இயக்க வேண்டும்.
வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில் முத்துப்பேட்டையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவாரூரில், தொழிலாளர் ஓய்வறை வேண் டும். இவ்வாறு அந்த மனுவில்
குறிப்பிடப்பட்டிருந்தது.
மனு அளிக்கும் நிகழ்வின் போது, கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார், துணை கோட்ட மேலாளர் ராமலிங்கம் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்க மாவட்ட செயலாளர் பேராசிரியர் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.