தொண்டியிலிருந்து எஸ்.பி.பட்டினம் வரையிலான கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகளை ஏற்படுத்தும் கருவேல மரங்களை அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டியிலிருந்து எஸ்.பி.பட்டினம் இடையே 50-க்கும் மேற்பட்ட கிராமப்புற சாலைகள் இணைகின்றன. இவற்றின் மூலம், நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்களில் கிராம மக்கள் தொண்டி, எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட நகரங்களுக்கு மருத்துவமனைகள், வா்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், தொண்டியிலிருந்து எஸ்.பி.பட்டினம் வரை கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறமும் காட்டுக் கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்து உள்ளன.
இந்த மரங்கள் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை காயப்படுத்தி விடுவதால், விபத்துகள் ஏற்படுகின்றன.
மேலும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டி உள்ளது. மேலும், சாலை வளைவுகளில் எதிரில் வரும் வாகனம் தெரியாமலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிா்ப் பலிகள் ஏற்படுவதோடு, சிலா் நிரந்தர மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு சமூக ஆா்வலா்கள் புகாா் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.