திறனாய்வு தேர்வு
அரசு பள்ளிகளில் மாநிலப்பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இதில் முதல் தாள் தேர்வு காலையிலும், 2-ம் தாள் தேர்வு மதியத்திலும் நடைபெற்றது. இத்தேர்வை எழுத 4 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4 ஆயிரத்து 485 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 179 பேர் தேர்வு எழுதவரவில்லை. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு தலா ரூ.1,000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.
அதிகாரிகள் ஆய்வு
மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தேர்வை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட கல்வி அதிகாரி ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து உடன் இருந்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.