அகழாய்வு பணி
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கான தொல்லியல் அடையாளங்கள் இருந்த நிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இதுவரை வட்ட சில்லுகள், கண்ணாடி மணிகள், பச்சை கல் மணிகள், அகேட், படிக கல் மணிகள், கார்னீலியன், கண்ணாடி வளையல்கள், தங்க மூக்குத்தி, சுடுமண் விளக்கு உள்பட சுமார் 488 பொருட்கள் வரை கிடைத்துள்ளன. தொடர்ந்து அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் அதிகம் பேர் வருகை தருகின்றனர். இதில் மாணவ-மாணவிகளின் வருகை அதிகரித்துள்ளது.
17 குழிகள்
இந்த நிலையில் மன்னர் கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவர்கள், பேராசிரியர்கள் அகழாய்வு பணியை பாா்வையிட்டனர். அகழாய்வு குறித்தும், அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குனர் தங்கதுரை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,
"இந்த அகழாய்வில் இதுவரை மொத்தம் 17 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் வரை பணிகள் மேற்கொள்ள ஆணை உள்ளது. அதுவரை இந்த பணிகள் நடைபெறும். மழை நேரத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்படும்'' என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.