கோபாலப்பட்டிணம்‌ மீமிசல் பகுதியில் பலத்த மழை




கோபாலப்பட்டிணம்‌ மீமிசல் பகுதியில்   மழை வெளுத்து வாங்கியதுவழக்கமாக அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது”



தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல பகுதியில் நேற்று முன்தினம் அக்டோபர் 14 அதிகாலையில் மழை வெளுத்து வாங்கியது
நேற்று அக்டோபர் 15 முழுவதும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது குளிரான காலநிலை இருந்தது இன்று அக்டோபர் 16 திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணி  முதல் காலை வரை மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது  வெப்பம் தணிந்து  கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்து வருகிறது குளிர்ச்சியான சூழல்நிலவியது. 

இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்கியது.

தற்போது பெய்த  மழையினால்  விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 
கோபால்ப்பட்டிணத்தில் காட்டுத்குளம் நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் இரண்டு குளங்களிலும் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது.. மழை பெய்து குளங்கள் எப்போது நிரம்பும் மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்.

பள்ளிகள் விடுமுறை 

மழையின் காரணமாக இன்று அக்டோபர் 16 திங்கட்கிழமை கோபாலப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.









VC Credit : Iliyas Thoufiq 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments