ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை யில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகாலிங்கம், துணை தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் தொண்டி பேரூராட்சியின் மேலத்தெரு பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல், பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேல்நிலை, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளின் பழுதடைந்த வால்வுகளை பழுது நீக்குதல், பாரூர் போர்வெல்லி லிருந்து திருவாடானை செல்லும் பைப் லைனை மர்ம நபர்கள் உடைப்பதால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது. அதனால் திருவாடனை மின் வாரிய அலுவலகம் முதல் ஆராய்குடி குளக்கால் வரை சுமார் 2.62 கிலோ மீட்டர் தொலைவில் புதிய குடிநீர் குழாய் பதிக்க வேண்டும் உள்ளிட்ட குடிநீர் சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மழை காலமாக இருப்ப தால் பொது மக்களின் சுகாதார நலன் கருதி சாலை களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு மணிமுத்து ஆற்றின் ஆரம்பம் முதல் இறுதி வரை இருபுறங்களில் கரை அமைத்து தண்ணீர்சீராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டி பேரூராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுக்கூட்டங்கள் அனுமதி பெறாமல் நடத்தப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருப்பதால் இனி வரும் காலங்களில் சாலைகள் மற்றும் தெரு க்களில் பொதுக்கூட்டம் நடத்த பேரூராட்சி நீர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ேமலும் கூட்டம் தொடர்பாக அனுமதி வழங்க மாவட்ட எஸ்.பி. மற்றும் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகி யோருக்கு தெரியப்படுத்து தல் தொடர் பாகவும் தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.