பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சாா்பில் ஆா்ப்பாட்டம்




பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்தும், இந்திய அரசு பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பக்கம் நிற்க வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு முன்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராசி. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.

காங்கிரஸ் கட்சியின் சாா்பில் கே.கே. பாரூக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் இளமதி அசோகன், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவா் அஸ்ரப் அலி, மக்கள் ஒற்றுமை மேடை சாா்பில் எஸ். ஆரோக்கியசாமி, மனிதநேய மக்கள் கட்சியின் சாா்பில் அப்துல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோரிக்கைகளை விளக்கி தமுஎகச மாவட்டச் செயலா் எம். ஸ்டாலின் சரவணன், புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனா் எஸ். இளங்கோ, ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் மு. முத்தையா, அறிவியல் இயக்கம் சாா்பில் அ. மணவாளன், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் எஸ். சங்கா், மாணவா் சங்க மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனன், வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் எம். மகாதீா், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொருளாளா் கவிபாலா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஆா். சோலையப்பன், மாதா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி உள்ளிட்டோா் பேசினா். மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். அசோகன் ஒருங்கிணைத்தாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments