பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 26-10-2023 கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் & தோழமை கட்சியினர் சார்பில் ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம்




கோபாலப்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  CPIM கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் & தோழமை கட்சியினர் சார்பில் ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  காத்திருக்கும் போராட்டம் 

கோபாலப்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  CPIM கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் & தோழமை கட்சியினர் சார்பில் ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 
காத்திருக்கும் போராட்டம் 26.10.2023 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது 

கோரிக்கைகள்: 

* ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானி, புரசக்குடி, மீமிசல், கோபால பட்டிணத்தில் ஆங்காங்கே
குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்று.

* கோபாலபட்டிணத்தில் புதிய ஆழ்குழாய் அமைத்தும், பழுதடைந்த சாலைகளை தார்சாலையாக
உடன் செப்பணிட்டுத் தருவதாக கொடுத்த வாக்குறிதியை உடன் நிறைவேற்று.

* கோபாலபட்டிணம் நெடுங்குளம் ஊரணியை தூர்வார நிதி 18 லட்சம் ஒதுக்கப்பட்டும் பணிதொடங்காதது ஏன்? பணியை உடனே தொடங்கிடு.

* கோபாலபட்டிணம் அவுலியா நகரில் பழுதடைந்துள்ள மூன்று சாலைகளை சிமென்ட் சாலையாக
மாற்றித்தர கொடுத்த வாக்குறிதியை உடன் நிறைவேற்றக் கோரி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments