கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியை சூழ்ந்த கருமேகங்கள் கூட்டம்




கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியை  கருமேகங்கள் கூட்டம் சூழ்ந்தது 

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று (ஆக்.29) 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அடுத்த 3 மணிநேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.  

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருச்சி, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல காரைக்காலிலும் கூட அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்  அக்டோபர் 29 காலை 10 மணியளவில் தீடீரென கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்தது விட்டு விட்டு வருகிறது வெப்பம் தணிந்து  கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான  சூழல் நிலவி வருகிறது. 
 கோபால்ப்பட்டிணத்தில் காட்டுத்குளம் நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் இரண்டு குளங்களிலும் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது.. மழை பெய்து குளங்கள் எப்போது நிரம்பும் மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments