முத்துப்பேட்டையில் கந்தூரி விழா 23-11-2023 விழாவில் பங்கேற்று திரும்ப செல்வதற்கும் முத்துப்பேட்டை ரயில் நிலையம் வந்து செல்லும் ரயில்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது




பிரசித்தி பெற்ற திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்ஹாவில் 23-11-2023 (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள சந்தனக்கூடு விழா நடைபெறுகிறது

இது குறித்து திருவாரூர் மாவட்ட ரயில் உபகியோப்பாளர் சங்கம் உறுப்பினர் ஆலத்தம்பாடி வெங்கடேசன் கூறுகையில் 

சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து முத்துப்பேட்டை செல்வதற்கு 

* வண்டி எண் 07695 செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து முற்பகல் 11-20 மணிக்கு புறப்படும்.

* அதுபோலவே தென்மாவட்ட பகுதிகளில் இருந்து வருகை தர திருநெல்வேலியில் இருந்து 22-11-2023  (புதன்கிழமை)  வண்டி எண் 20684 தாம்பரம் அதிவிரைவு ரயில் மாலை 5-40 மணிக்கும்

* 23-11-2023 (வியாழக்கிழமை)  வண்டி எண் 06070 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண விரைவு ர‌யி‌ல் சேவை மாலை 6-45 மணிக்கும் உள்ளது.

சந்தனக்கூடு விழாவிற்கு வருகை புரிந்த பக்தர்கள் ஊர் திரும்ப

* தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்ல 24-11-2023 (வெள்ளிக்கிழமை)  அதிகாலை 2-55 மணிக்கு வண்டி எண் 20683 செங்கோட்டை அதிவிரைவு ரயில்  மற்றும் இரவு 10-40 மணிக்கு வண்டி எண் 06069 திருநெல்வேலி சிறப்பு கட்டண விரைவு ர‌யி‌ல் ஆகியன உள்ளது.

* சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு செல்ல 24-11-2023 (வெள்ளிக்கிழமை) வண்டி எண் 07696 செகந்திராபாத் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் பிற்பகல் 1-42 மணிக்கும்

* வண்டி எண் 20684 தாம்பரம் அதிவிரைவு ரயில் இரவு 11-19 மணிக்கும் உள்ளது

உரியவாறு பயன்படுத்தி கொள்ளவும்.

குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறேன்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments