கோபாலப்பட்டினத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கடிதம் விநியோகம்





கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்பது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை. உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை என்று உரிமைத்தொகை திட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமான குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், அண்ணா பிறந்த நாளான கடந்த செப்.15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில், குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதலமைச்சரின் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் முதல்வர் வாழ்தது கடிதம் பொதுமக்களுக்கு  விநியோகம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் அந்த அறிவிப்பு கடிதத்தை வாங்கி வருகிறார்கள்.

இது குறித்து அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறுகையில் 

அன்புக் கட்டணையால் தமிழ்நாட்டிவி முதலமைச் சராகத் தொண்டாற்றும் வாய்ப்பைப் பெற்ற உங்களின் அன்பு உடன்பிறப்பு, முத்துவேல் கருணநிதி ஸ்டாவின் உங்களுக்கு எழுதும் கடிதம்

பேருத்தில் மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயணம். அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயில கல்லூரிக்கு வரும் புதுமைப் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை. நகைக்கூடன் ரத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் புதிய மகனிர் யை உதவிக்குழுங்கள் உருவாக்கம் என மகளிருக்கு ஏராளமான திட்டங்களர் செயல்படுத்தி வருவது திராவிட மாடல்! என்பதை நீங்கள் அறிவீர்கள் மகளிர் வாழ்க்கையில் மாத்தான மாற்றத்‌ இத்திட்டங்கள் உருவக்கி உள்ளன.

அந்த வரிசையில் மற்றும்மாரு மாபெரும் திட்டம்தான் தேர்தலுக்கு முன்னிதிக நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் மிகமிக முக்கியமான மகளிர் உரிமைத் திட்டம் இந்தத் திட்டத்தின் பயனாளியாகத் தகுதியின் அடிப்படையில் தாங்கள் தேர்நதெடுக்கப்பட்டு உள்னீர்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி மாதம்தோறும், ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக் கணக்கில் தமிழ்நாடு அரசால் நேரடியாக  வைக்கப்படும். பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய்ட் சகோதரி, மனைவி. மகன் எனப் பெண்களின் பல' மணிநோ உழைப்பு இருக்கிறது. இப்படி கணக்கில் கொள்ளப்படாத:
பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே இத்தொகையாகும்.

பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, உள்ளாட்சி அமைப்புகளிலும் பணியிடங்களிலும் உடஒதுக்கீடு வழங்கிய மகனிர் முன்னேற்ற மாண்பாளர் - முத்தமிழறிஞர் ஞர் அவர்களின் பட் நூற்றாண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்படுவதால்ஞர்களிர் உரினைத் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல. உரிமைத் தொகை, உங்களில் ஸ்டாலின் வழங்கும் தொகைப்
உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments