அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு மோட்டார் தொழில்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா, நிர்வாகிகள் வழக்கறிஞர் அலாவுதீன், சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்சாலை போக்குவரத்து மாவட்ட தலைவர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். நவம்பர் 7-ந் தேதி வெளியிடப்பட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அக்ரிகேட்டர் விதிகளை உடனடியாக வகுக்க வேண்டும். ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். போக்குவரத்து ஆய்வாளர், காவல்துறை மாமுல் வாங்குவதை தடுக்க வேண்டும். 2019 மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும், இணைய வழி சேவையை உடன் துவக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் அறந்தாங்கி, கீரமங்கலம், மணமேல்குடி கார், வேன், சரக்கு வேன் உரிமையாளர்கள், டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.