தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களாக ஆங்காங்கே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. இதையொட்டி தொண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சியில் உள்ள 15 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் ஒட்டுமொத்த சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பேரூராட்சி பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், கிருமி நாசினி தெளித்தல், கொசு புழுக்கள் ஒழிப்பு மருந்துகள் ஊற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மஸ்தூர் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடையே டெங்கு தடுப்பு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீடு, வீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தொடங்கி வைத்தார். இப்பணிகளை பேரூராட்சி துணை தலைவர் அழகு ராணி ராஜேந்திரன், செயலாளர் மகாலிங்கம், மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.