கோபாலப்பட்டிணத்தில் காட்டுக்குளம் வழியாக மீமிசல் செல்லும் சாலையில் கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியாமல் இருளில் மூழ்கி உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பகுதியில் தெரு விளக்குகள் எரியாமல் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காட்டுகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக அங்குள்ள தெரு விளக்குகள் எரிவதில்லை என கூறப்படுகிறது.
மேலும் ஏராளமானோர் தினமும் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்வோர் பயந்து செல்கின்றனர் மேலும் இப்பகுதி இருட்டாக இருப்பதால் பாம்புகள் மற்றும் பூச்சிகள் அருகில் செல்லும் சூழ்நிலை உருவாகும் இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.
ஆகையால் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக காட்டுக்குளம் பகுதியில் எரியாத மின் விளக்குகள் சரி செய்து கொடுத்து கோபாலப்பட்டிணம் மக்களின் நலனை காக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.