மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கநிலை மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.




புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி  வட்டார கல்வி அலுவலர்  செழியன் அவர்களின் தலைமையிலும் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்  இந்திராணி அவர்கள் மற்றும்  மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு  சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது. 
பள்ளி தூய்மை பணி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
* பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை பதிவு செய்தல் வேண்டும் என்றும் பதிவு செய்யப்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 
* ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவு செய்தல் வேண்டும் என்றும், 

எமிஸ் இணையதளத்தில் பள்ளி தொடர்பான புகைப்படங்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

மாவட்ட அளவில் முன்னுதாரணமாக அன்றாடப் பணிகளில்
ஆசிரியர்கள் உடனுக்குடன் பதிவுகள் மேற்கொள்ள வேண்டுதல்

* பள்ளிச் செல்லா  மாணவர்களை கண்டறிந்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும் என்றும்,

 மாணவர்கள் குறிப்பேடுகளைச் சரிவர திருத்தி உரியவாறு மதிப்பீடு செய்தல் வேண்டும் என்றும் 
 எமிஸ் தொடர்பான பணிகளை உடனுக்குடன் முடிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

 இக்கூட்டத்தில்  அனைத்து தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு.முத்துராமன் திரு வேல்சாமி மற்றும்  மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்னண் ஆகியோர் கலந்து கொண்டனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments