இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு திட்டத்தின்படி மாநில அளவிலான பொது மக்களுக்கான வினாடி- வினா போட்டி வருகிற 21-ந் தேதி காலை 11 மணி முதல் 11.15 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள நபர்கள் இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம். இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை இணையதளத்தில் இன்றுக்குள் (வெள்ளிக்கிழமை) பதிவு செய்ய அனுமதிக்கப்படும். இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். இந்தியாவின் தேர்தல்கள் என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான மாநில உதவி மைய எண் 1800-4252-1950 மற்றும் மாவட்ட உதவி மைய எண் 1950 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.