நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் நடந்து வருகிறது. இதனால் நாகை உள்பட பல்வேறு மாவட்ட மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாகையை அடுத்த நாகூரை சேர்ந்த கோடிலட்சம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த செந்தில்குமார்(வயது 30), விஜயகுமார்(20), முகிலன்(18), கணேசன்(50), ராமகிருஷ்ணன்(58) ஆகிய 5 மீனவர்கள் கடந்த 25-ந் தேதி மதியம் கோடியக்கரை மீன்பிடி தளத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது நள்ளிரவில் பலத்த காற்று வீசியதால் படகு கடலில் கவிழ்ந்தது.
இதனால் 5 மீனவர்களும் கடலில் விழுந்து ஐஸ் பெட்டி, டீசல் கேன் ஆகியவற்றை பிடித்துக்கொண்டு 20 மணி நேரம் தத்தளித்தனர். அப்போது மீன்பிடித்துக்கொண்டு திரும்பிய ஜெகதாப்பட்டினம் மீனவர்கள், கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்த நாகூர் மீனவர்களை மீட்டு நேற்று காலை கோடியக்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் 5 மீனவர்களும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மூழ்கிய படகு, மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.