அரசு பள்ளிக்கு மேஜை-நாற்காலிகள் வழங்கல்





ஆவுடையார்கோவில் அருகே பொன்பேத்தி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 270-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு முன்னாள் மாணவர் பொன்துரை சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மேஜை, நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மேஜை, நாற்காலிகள் உள்ளிட்டவற்றை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சண்முகநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வள்ளால மோகன், முன்னாள் மாணவர்கள் மாரிமுத்து, வடிவேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments