கோபாலப்பட்டிணம் மற்றும் மீமிசல் அரசுப் பள்ளியில் படிக்கும் +2 வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டும் செயல்பாடாக கல்லூரி களப் பயணம்




ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் இருந்து கோபாலப்பட்டிணம் மற்றும் மீமிசல் அரசுப் பள்ளியில் படிக்கும் +2 வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டும் செயல்பாடாக கல்லூரி களப் பயணம்  அறந்தாங்கி கல்லநேந்தல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அழைத்து சென்றனர். 
புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியர் அவர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் இந்த கல்வியாண்டில் (2023-24) பன்னிரண்டாம் வகுப்பு பயிலும்  மாணவர்களுக்கு உயர் கல்வி பயில ஆர்வமூட்டும் செயல்பாடாக மாணவர்களை  அறந்தாங்கி  கல்லநேந்தல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப் பட்டனர். 

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் பொறுப்பு பேராசிரியர்  பாலமுருகன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

 நாட்டு நலப்பணி திட்ட அலுவலக அலகு 1 பழனித் துறை  அலகு 2 முனைவர் ரமேஷ் ரெட்ரில் கிளாஸ் ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மாணவிகள்  அனைவரையும் வரவேற்றார்கள்

இந்நிகழ்வில் துறைவாரியாக பாடப்பிரிவுகளை குறித்த விளக்கங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

 அதேபோல் நூலக பயன்பாடு குறித்து விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

உயர்கல்வி செல்வதற்கு மாணவர்கள் விண்ணப்பங்களை சரியான நேரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்  என்றும்  கேட்டுக் கொள்ளப்பட்டது.

 இந்நிகழ்வில் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி கோபாலப்பட்டிணம் மற்றும் மீமிசல்  பள்ளியிலிருந்து 70 மாணவர்கள் களப்பயணத்தில் பங்கேற்றனர் கோபாலபட்டிணம்
பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் திரு. S. சிவா வணிகவியல் ஆசிரியர் மற்றும் மீமிசல் மேல்நிலைப்பள்ளி உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர் திரு. V. மதிபாலன் அவர்கள் தலைமையில் அழைத்து செல்லப்பட்டார்கள்

மாணவர்கள் இக்களப்பயணத்தில் ஆர்வமாக பாடப்பிரிவுகளையும் கேட்டு அறிந்தனர். இது ஒரு சிறந்த வழிகாட்டி நிகழ்வாக இருந்தது என்று மாணவர்கள் மகிழ்வுடன் கூறினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments