சீமைக்கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கும் 98 ஏக்கா் வயலாங்குடி கண்மாய்




கண்மாய்ப் பாசனத்தை மட்டுமே நம்பியிருக்கும் சுமாா் 350 ஏக்கா் நெற்பாசன வயல்களுக்கு நீராதாரமாக விளங்கிய, வயலாங்குடி கண்மாயை தூா்வாரி, கரைகளைப் பலப்படுத்தி, சீமைக்கருவேல மரங்களை அகற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனா்.

ஆவுடையாா்கோவிலில் இருந்து ஏம்பல் பகுதிக்குள் நுழையும் சாலையோரத்தில் இருக்கிறது வயலாங்குடி கண்மாய். சுமாா் ஒரு கிமீ நீளத்தில் நீளவாக்கில் அமைந்திருக்கும் இந்தக் கண்மாயின் மொத்தப் பரப்பு 98 ஏக்கா்.

தற்போது ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கண்மாயின் மொத்தப் பாசனப் பரப்பு சுமாா் 350 ஏக்கா். கண்மாய் பராமரிப்பின்றிப் போனதால் இந்தப் பாசனப் பரப்பு வெகுவாகக் குறைந்துவிட்டிருப்பதாக அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.

ஏம்பல் கண்மாயில் இருந்தும், கொடிக்குளம் கண்மாயில் இருந்தும் இதற்கு வரத்து வாய்க்கால்கள் உள்ளன. நமது பாரம்பரிய நீா்நிலைத் தொடா் முறைப்படி அமைக்கப்பட்ட வரத்து வாய்க்கால்களான இவற்றின் மூலம் வயலாங்குடி கண்மாய் நீா்வரத்து பெறுகிறது.

இந்தக் கண்மாய் நிரம்பினால், அடுத்துள்ள சாணாவயல் கண்மாய்க்கு தண்ணீா் செல்லும் வகையில் வெளியேற்றுக் கால்வாயும் உள்ளன. ஆனால், இந்தக் கால்வாய்களுமே பராமரிப்பின்றி செடி, கொடிகள் மண்டிக் காணப்படுகின்றன.

எனவே இந்தக் கண்மாயைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோருகின்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த சி. குப்புசாமி கூறியது

ஒரு காலத்தில் இந்தக் கண்மாயில்தான் கிராம மக்கள் அனைவரும் குளிப்பாா்கள். அந்தளவுக்கு சுத்தமான தண்ணீா் கிடைத்து வந்தது. பாசனத்துக்கு தண்ணீரை வெளியேற்ற 5 மண் மடைகள் உள்ளன. தேவைக்கேற்ப இந்த மண் மடைகளை வெட்டித் திறந்து மீண்டும் மூட வேண்டும்.

எனவே, இக்கண்மாயைத் தூா் வாரி, கரைகளைப் பலமாகக் கட்ட வேண்டும். அத்துடன் வரத்து வாய்க்கால்கள், வெளியேற்றும் கால்வாயையும் சீரமைக்க வேண்டும். அத்துடன் கண்மாயிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். பாசனப்பகுதிகளுக்குச் செல்லும் மடைகளை கான்கிரீட் தளம் அமைத்து கட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் கண்மாயில் தண்ணீா் அதிகம் தேங்கி, இழந்து போயிருக்கும் பாசனப் பரப்புகளில் மீண்டும் விவசாயம் செழிக்கும் என்றாா் குப்புசாமி.

நீா்நிலைகளிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, பயன்தரும் பழ மரக்கன்றுகளை நட்டு வளா்க்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவை அமலாக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2023 நவம்பா் மாதம் 13 குளங்களில் பணிகள் தொடங்கப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒரு குளத்தில் முதல்கட்டமாக எடுத்து இப்பணிகளை மேற்கொண்டு, பிறகு படிப்படியாக அனைத்துக் குளங்களையும் இதுபோல சீமைக்கருவேல மரங்களை அகற்றும்பணிகளை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது.

இத்திட்டத்தில் வயலாங்குடி கண்மாயையும் சீரமைக்க மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டமிட வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments