புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகைகளுக்கான 9.59 லட்சத்தில் காசோலைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா வழங்கினாா்.




புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 31 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 9.59 லட்சம் மதிப்பில் ஈமச்சடங்கு நிதி, விபத்து மரண நிதி உள்ளிட்ட உதவித் தொகைகளை ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா திங்கள்கிழமை வழங்கினாா். மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் இந்த உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. மேலும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பாம்பு கடித்து உயிரிழந்த இருவரின் வாரிசுகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகளையும் ஆட்சியா் வழங்கினாா். குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 339 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜி.அமீா்பாஷா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஸ்ரீதா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments