தமிழ்நாடு வனத்துறை சார்பில், புதுக்கோட்டை வனக்கோட்டம், அறந்தாங்கி வனச்சரகம் இணைந்து மணமேல்குடியில் கடற்பசு பாதுகாப்பு குறித்து துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தலைமை தாங்கினார். அறந்தாங்கி வனச்சரக அலுவலர் மணிவெங்கடேஷ், மீன்வளத்துறை சார் ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கடற் பசு மற்றும் கடல் தாழைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றிற்கான அச்சுறுத்தல்களையும் கலந்தாலோசிக்கப்பட்டது. பாக் ஜலசந்தியில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் வரை உள்ள கடல்பகுதி தமிழக அரசால் 2022-ம் ஆண்டு கடற்பசு பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு வனத்துறையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 42.8 கி.மீ. நீள கடற்கரையில் உள்ள மீனவ கிராமங்களுக்கு மாலை நேரத்தில் நேரில் சென்று அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்களான கடற்பசு, கடல் ஆமை, கடல் அட்டை மற்றும் இன்னும் பிற அரிய உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமேல்குடி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா நடேசன், புதுக்கோட்டை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைவர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.