இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று முதல் நடக்கிறது




கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். தற்போது புதிதாக இலங்கையில் சட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது. அதில் எல்லை தாண்டி மீன்பிடித்தால் முதல் தடவை எச்சரிக்கையும், 2-வது தடவை பிடிபட்டால் படகு ஓட்டுனருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், அதில் செல்லக்கூடிய நபர்களுக்கு 6 மாத தண்டனையும் வழங்கப்படும். விசைப்படகு அரசு உடைமையாக்கப்படும் என்று அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று அறிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments