பணிகளை விரைந்து முடித்ததும் போக்குவரத்து தொடங்கும் எனவும், பாம்பன் புதிய பாலத்தை 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என்றும் ரெயில்வே வாரிய தலைவர் ஜெய வர்மா சின்கா தெரிவித்தார்.
பாம்பனில் புதிய பாலம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராேமஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் பாம்பனில் கடலில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் பாலம் பழுதடைந்துள்ளது. எனவே அங்கு புதிய பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் பணிகள் தொடங்கின.
ஆனால் கொரோனா காரணமாக இந்த பணிகளை வேகமாக நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது இந்த பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், புதிய பாலத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார்.
புதிய பாலத்துக்கான தேவை
அதைத்தொடர்ந்து அந்த பாலம் வழியாக விரைவில் ரெயில் போக்குவரத்து நடைபெறும் என ரெயில்வே வாரிய தலைவர் ஜெய வர்மா சின்கா கூறியுள்ளார்.
இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பாம்பனில் கட்டப்பட்டிருந்த ரெயில் பாலம் பழமையாகி, பயன்பாட்டுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. எனவே புதிய பாலம் கட்டுவதற்கான தேவை ஏற்பட்டது.
1913-ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த பாலம் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பயன்படுத்த முடியாததாக அறிவிக்கப்பட்டது. எனவே மண்டபம்-ராமேஸ்வரம் இடையேயான ரெயில் போக்குவரத்து கடந்த 2022 டிசம்பர் 23-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டது.
பாராட்டத்தக்க பணி
தற்போது அனைத்து ரெயில்களும் மண்டபம் வரையே சென்று வருகின்றன. அதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் செல்ல வேண்டிய பயணிகள் சாலை வழியாக சென்று வருகின்றனர்.
பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வழியாக விரைவில் போக்குவரத்து நடைபெறும்.
பாலம் புனரமைப்புப் பணிகளில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களை கருத்தில் கொண்டு எமது மக்கள் பாராட்டத்தக்க பணியை செய்துள்ளனர். மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் கடலில் நாட்டிலேயே முதன்முறையாக செங்குத்தான தூக்கு பாலம் அமைப்பது மிகவும் சவாலான பணியாகும்.
இவ்வாறு ஜெய வர்மா சின்கா தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.